அரசுடன் பேச எந்த நேரமும் தயார்! - சம்பந்தனின் அறிவிப்பு (பத்திரிக்கை கண்ணோட்டம்)
அரசுடன் நேரில் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் திறந்த மனதுடன் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும், பேச்சு வார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை ஜனாதிபதி எம்மை பேச்சுக்கு அழைக்கின்ற போது நேரில் தெரிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.