கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் துரிதமாக அதிகரிப்பு
இலங்கையில் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார காலத்தில் இலங்கையில் 11 ஆயிரத்து 56 கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் ஆயிரத்து 452 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 18 ஆம் திகதி ஆயிரத்து 420 தொற்றாளர்களும், 19 ஆம் திகதி ஆயிரத்து 487 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
20 ஆம் திகதி ஆயிரத்து 554 தொற்றாளர்களும், 21 ஆம் திகதி ஆயிரத்து 604 தொற்றாளர்களும், 22 ஆம் திகதி ஆயிரத்து 724 தொற்றாளர்களும், 23 ஆம் திகதி ஆயிரத்து 815 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடு முடக்கப்பட்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறு கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பாரிய சிக்கல் என சுகாதார துறையினர் கூறியுள்ளனர்.