பிரான்ஸில் ஜனாதிபதி முன்வைத்த கருத்து! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கடந்த ஜூன் 19ஆம் திகதியன்று பிரான்ஸில் கென்சர்வேடிவ் சுற்றுச்சூழல் வலையமைப்பின் மாநாட்டில் பேசிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்தமை குறித்து, மோசமான கேள்விகளை எதிர்கொண்டதாக சர்வதேச ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் வளர்ந்து வரும் இராணுவமயமாக்கல் மற்றும், பௌத்த விகாரைகளை திணித்தல் போன்ற கேள்விகள் அவரிடம் தொடுக்கப்பட்டிருந்தன.
முறைகேடான செயல்
இந்நிலையில் தமிழ் செயற்பாட்டாளரான சொக்கலிங்கம் யோகலிங்கம், ஜனாதிபதியிடம் இந்த கேள்விகளை தொடுத்திருந்தார்.
எனினும் இதற்கு பதில் வழங்க முடியாத நிலையிலேயே இலங்கை ஜனாதிபதி யோகலிங்கம் எழுப்பிய கேள்விகளை புறக்கணித்து, குறுக்கிட்டு, 'உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்றால், தமிழில் பேசுங்கள் எனக்கு தமிழ் புரியும்' என்று கூறியதாக சர்வதேச ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |