இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் : பசில் சூளுரை - செய்திகளின் தொகுப்பு
இந்த ஆட்சியை நிறுவிய ராஜபக்சக்கள் பதவிகளை மாத்திரம் துறந்து விட்டுப் பங்காளர்களாக தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ராஜபக்சக்கள் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் வீரியத்துடன் உள்ளது.
இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் என்பதை எவரும் மறக்கக்கூடாது.
தேர்தல்களை எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள் மொட்டுக் கட்சி மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்று இன்று பிதற்றுகின்றார்கள்.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
