அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில்
தேசிய இனப்பிரச்சினைகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பனவே நாடு எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க வேண்டுமாயின் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமை
இந்த திட்டத்திற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முன்நோக்கி நகர வேண்டுமாயின் வலுவான பொருளாதாரத்தைப் போன்றே இனங்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் என எந்த இனத்தைச் சேர்ந்தாலும் அவர்கள் அனைவரும் இலங்கையர்களே என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
