அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில்
தேசிய இனப்பிரச்சினைகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பனவே நாடு எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க வேண்டுமாயின் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமை
இந்த திட்டத்திற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முன்நோக்கி நகர வேண்டுமாயின் வலுவான பொருளாதாரத்தைப் போன்றே இனங்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் என எந்த இனத்தைச் சேர்ந்தாலும் அவர்கள் அனைவரும் இலங்கையர்களே என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
