ரணில் விக்ரமசிங்க கியூபா - அமெரிக்காவிற்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானா நகரில் நடைபெற உள்ள ஜி-77 மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
சுமார் 134 நாடுகளை அங்கத்துவமாக கொண்ட ஜி-77 அமைப்பபானது அதன் உறுப்பு நாடுகளின் பொருளாதார தேவைகளை மேம்படுத்துவதற்காக 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அணிசேரா கொள்கை
மேலும், அணிசேரா கொள்கைகளை கொண்ட அமைப்பாக இந்த அமைப்பு காணப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்தியின் தற்போதைய சவால்கள் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் என்பனவற்றின் செயற்பாடுகள் என்ற துணைப் பொருளில் இம்முறை இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
