தேர்தல் சட்டங்களை மீறிய ரணிலின் பிரசார கூட்டம்: முன்வைக்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டு
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்டம் மீறப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மதிய உணவை வழங்குவதைத் தடுப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தேசிய இளைஞர் சேவை
இந்நிலையில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர், இந்த நிகழ்வில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார் எனவும் கொழும்பு மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அரச சொத்தைப் பயன்படுத்தியும் தேர்தல் சட்டங்களை மீறியும் இளைஞர் சேவை மன்றத்தின் நடனக் குழுவும் மாநாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri