ரணிலின் கைது விவகாரம்.. நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு
சமர்ப்பிக்கப்பட்ட ஆதராங்களை கருத்தில் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேற்கொண்ட விஜயம் ஒரு உத்தியோகபூர்வ பயணம் அல்ல, மாறாக ஒரு தனிப்பட்ட பயணம் என்று கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமர்ப்பித்த ஆவணங்கள் விரிவான விசாரணைக்குப் பிறகு ஆராயப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இன்று சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளின் அடிப்படையில், இந்த விஜயம் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாக இல்லை என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
மருத்துவ அறிக்கை..
இந்த விஜயம் தனிப்பட்டதாகக் கருதப்படுவதால், அது பொது சொத்துச் சட்டத்தின் விதிகளின் கீழ் வருகிறது. 1982 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க பொது சொத்து (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 8(1) இன் கீழ் எந்த முறைகேடுகளும் நிறுவப்படாததால், சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டார் என நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

மேலும், சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சுகாதார நிலை குறித்த மருத்துவ அறிக்கை எதுவும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரின் உடல்நிலையை உறுதிப்படுத்த அடுத்த விசாரணை திகதியில் பொருத்தமான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
[
கூடுதலாக, எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பணியாற்றியபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சந்தேக நபரின் சட்டத்தரணி முன்வைத்த வாதங்கள், பிணை கோரிக்கையுடன் தொடர்புடையவை அல்ல என்று நீதவான் தெளிவுபடுத்தியுள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam