ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் அம்பலமாகிய 32 வருட இரகசியம்: செய்திகளின் தொகுப்பு
ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை, டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்த நிலையில் கடந்த வாரம் அவரின் சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகம் வெளியானது.
அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு ஒருவாரம் முன்பு ராஜீவ் காந்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காஞ்சி சங்கர மடத்திலிருந்து எச்சரிக்கப்பட்டதாக சேஷன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து டி.என்.சேஷன் குறிப்பிட்டுள்ளதாவது, ”1991 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி ராஜீவ் காந்தியை தொடர்புகொண்டு தனிப்பட்ட முறையில் எச்சரித்தேன்.
திறந்தவெளியில் பிரசாரம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மீண்டும் அவரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கு நான் இரு முறை இறக்கமாட்டேன் என சிரித்துக்கொண்டே அவர் பதிலளித்தார்.
4 நாட்கள் கழித்து மே 14 ஆம் திகதி ராஜீவ் காந்தியை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி காஞ்சி சங்கர மடத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் எச்சரித்தும் அவர் பிரசாரம் செய்கிறார் என பதிலளித்தேன்.
இது குறித்து உடனடியாக அவருக்கு தந்தி அனுப்பினேன். அது மே 17 ஆம் திகதி அவரின் மேசைக்குச் சென்றது. ஆனால் அதை படிப்பதற்கு முன்பே மே 21-ம் திகதி சிறிபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
