கல்விக்கு உதவுவதே எமது ஒரே நோக்கம் - ராஜி அறக்கட்டளை ஸ்தாபகர்
பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு உதவுவதே எமது ஒரே நோக்கம் எனவும் தந்தை விட்டு சென்ற பணியையே தான் தொடர்வதாகவும் ராஜி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் நேசன் சங்கர் ராஜி தெரிவித்துள்ளார்.
மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சங்கர் ராஜி அறக்கட்டளையின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று தலாக்கலை பகுதியில் நேற்று (04.08.2024) மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“நான் எனது சொந்த நிதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மலையகத்தில் மத்திய மாகாணத்திலும், சம்பூர் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் எனது தந்தையின் பெயரில் பல வேலைதிட்டங்களை முன்னெடுத்து வருகிறேன்.
கல்வியினை உயர்த்தல்
கடந்த காலங்களில் நுவரெலியா கல்வி வலயத்தில் மாணவர்களின் கனணி அறிவினை விருத்தி செய்வதற்காக பாடசாலைக்களுக்கு கனணிகளை பெற்றுக்கொடுத்துள்ளேன்.
அத்துடன் நின்று விடாது மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகாரிப்பதற்காக சத்துணவு வேலைத்திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். இதே போல் உயர்தரம் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி கணித விஞ்ஞான பாடங்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்குகளையும், மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் பெற்றுக்கொடுத்து வருகிறேன்.
மலையக மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணபதற்கு என்னால் முழுமையாக செய்ய முடியாது ஆனால் அவர்களின் கல்வியினை உயர்த்துவதன் மூலம் ஒரு சில குடும்பங்களையாவது நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |