நாட்டில் மழையுடனான வானிலை நீடிக்கும்
நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, மேல், வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய, சப்கரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |