ரஷ்ய-உக்ரைன் போரில் திடீர் திருப்பம்! சமாதான பேச்சுவார்த்தை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
சமாதான திட்டம் குறித்து விவாதிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய போரினால் உலகின் பல நாடுகள் பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய உக்ரைன்-ரஷ்ய போரை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பது குறித்து ஆப்பிரிக்க தலைவர்கள் அண்மைக்காலமாக பேசி ஆலோசனை நடத்தி வருவதாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ராமபோசா தெரிவித்திருந்தார்.
அமைதி பேச்சுவார்த்தை
இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவரும் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களின் குழுவுடன் ஒப்புக் கொண்டதாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி தெரிய வந்துள்ளது.
மேலும் தனது ரஷ்ய மற்றும் உக்ரைனிய சகாக்களுடன் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, வார இறுதியில் தொலைபேசியில் பேசியதாக அவரது அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி பேச்சுவார்த்தை பணியில் ராமபோசாவுடன் ஜாம்பியா, செனகல், காங்கோ, உகண்டா மற்றும் எகிப்து நாடுகளின் தலைவர்கள் சேர திட்டமிட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
