வெள்ள நீரில் மூழ்கிய புதுக்குடியிருப்பு வீதி:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கன மழைகாரணமாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி நீரில் மூழ்கியுள்ளதால் குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அந்தவகையில் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரமான குறித்த சுண்ணாம்புச்சூளை வீதியானது நீண்டகாலமாக சீரின்றிக் காணப்படுவதாக அப்பகுதி மக்களால் நாடாளுன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
சுண்ணாம்புச்சூளை வீதி
இதனால் பாடசாலை மாணவர்கள், அவசர மருத்துவ சேவையைப் பெறுவதற்காக செல்பவர்கள் என சகல தரப்பினரும் நீண்ட காலமாக பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் காணப்படுதவதாகவும் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக குறித்த சுண்ணாம்புச்சூளை வீதியானது முற்றாக பயன்படுத்த முடியாதவாறு நீரில் முழ்கிக் காணப்படுகின்றது.
கோரிக்கை
எனவே தாம் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு குறித்த சுண்ணாம்புச்சூளை வீதியைச் சீரமைத்துத் தருமாறு மக்களால் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வீதிச் சீரமைப்புத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
