புதிய மதுபான நிலையம்:மக்கள் தரப்பில் எழுந்துள்ள எதிர்ப்பு(Video)
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிய மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம்
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில், அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதியை இரத்து செய்யுமாறு பதாதைகளை ஏந்தி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அச்சுறுத்தும் நடவடிக்கை
இதேவேளை செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் குறித்த மதுபான விற்பனை நிலையத்தினரால் புகைப்படம் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவையும் மீறி புதிய மதுபானசாலை அமைய உள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, மற்றும் விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன.
பெரிய பரந்தன் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள்.
எனவே தமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதானது பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்.
குறித்த மதுபானசாலை விஷயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அதற்கான அனுமதி வழங்கியதை ரத்து செய்யக் கோரி மக்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக செய்தி-யது,எரிமலை