ஹிஷாலினி புதைக்கப்பட்ட இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள்! - செய்திகளின் தொகுப்பு
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயதான ஹிஷாலினி ஜூட் மரணம் குறித்து விசாரிக்கும் சிறப்பு பொலிஸ் குழு ஹட்டன் டயகம பகுதியில் உள்ள பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் டயகம பகுதிக்கு சென்ற சிறப்பு பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகரின் உறுப்பினர்களிடமிருந்தும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் முன்பு பணியாற்றி பல பெண்களிடமிருந்தும் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,