தொடர் போராட்டங்களுக்கு பொதுமக்கள் கண்டனம்! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
கோவிட் தொற்றுக்கு மத்தியில் சில குழுக்களின் தொடர் போராட்டங்களுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன, கோவிட் தொற்று பரவுவதால் ஏற்படும் அபாயம் குறித்து பொதுமக்கள் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இவை இடைநிறுத்தப்பட்டது.
உலகம் தொற்றுநோயை எதிர்கொள்ளும்போது, 500-1,000 எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி பெரிய கொத்தாக உருவாக்கினர் என்று அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே, திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் அபாயகரமானவை என்று அவர் குறிப்பிட்டார்,
இவ்வாறான நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுவதால், வைரஸ் பரவுவதைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்ற இதுபோன்ற கூட்டங்கள் தடுக்கப்பட வேண்டும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
