இறந்த கால்நடைகளுக்கான நட்டஈடு வழங்குவதில் முறைகேடுகள்! பொது மக்கள் குற்றச்சாட்டு -திணைக்களம் மறுப்பு
டித்வா அனர்த்தம் காரணமாக இறந்த கால்நடைகளுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பூநகரி பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்களது பிரதேசத்தில் அனர்த்தம் காரணமாக இறந்த கால்நடைகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டது தொடக்கம் நட்டஈட்டு தொகை வரை முறையாக இடம்பெறவில்லை என முறைபாடு செய்துள்ளனர்.
அத்துடன் பூநகரி பிரதேச செயலக அலுவலகத்திலும், பூநகரி பிரதேச கால்நடை திணைக்கள அலுவலகத்திலும் காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள பெயர்களிலும், பின்னர் நட்டஈடு வழங்கப்பட்ட பெயர்களிலும் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் பொது மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
திணைக்களத்தின் தகவல்
கால்நடைகள் வளர்க்காதவர்கள் மற்றும் அதிக கால்நடைகளை இழந்தவர்களுக்கு குறைந்த நட்டஈடும் வழங்குதல், குறைவான கால்நடைகளை இறந்த பயனாளிகளுக்கு அதிக நட்டஈடும் வழங்தல் என பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைபாடு செய்துள்ளபோதும் திணைக்களம் அதனை ஏற்க மறுத்ததாக பொது மக்கள் முறையிட்டிருந்தனர்.

எனவே இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கால்நடைகள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அலுவலத்துடன் தொடர்பு கொண்டு வினவியபோது டித்வா புயலால் இறந்த கால்நடைகளுக்கான நட்டஈடு வழங்கும் செயற்பாட்டில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பயனாளிகளுக்கு இறந்த அனைத்து கால்நடைகளுக்குமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அந்தளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கிடைக்கப்பெற்ற நிதியினை பயனாளிகளின் இழப்பீட்டுக்கு ஏற்பவே வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் அவர்கள் காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலுக்கும், நட்டஈடு வழங்கப்பட்ட பட்டியலுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் தொடர்பில் தாம் ஆராய்ந்து கூறுவதாகவும் தெரிவித்தனர்.
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam