சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் - டக்ளஸ் தேவானந்தா
சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, கௌதாரிமுனை பிரதேசத்தில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை தொடர்பாக இன்று(30) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
"2017 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்த அப்போதைய அரசாங்கத்திடம் அவசியமான அனுமதிகளைப் பெற்றுக் கொண்ட குறித்த சீன நிறுவனம், அரியாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றினைக் குத்தகைக்குப் பெற்று கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையம் ஒன்றினை ஆரம்பித்திருந்தது.
பின்னர், அரியாலை கடல் பிரதேசத்தில் கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலத்தினையும் அமைத்துச் செயற்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணை ஒன்றினையும் அமைத்துள்ளார்கள்.
கடலட்டைப் பண்ணைகள் தொடர்பான அனுமதிகள் நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த சீன நிறுவனத்திற்கான அனுமதிகள் நக்டா நிறுவனத்தின் கொழும்பு தலைமை அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வௌயிட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆராய்ந்து பூரணமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அதேவேளை, விரைவில் குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பிரதேச கடல் தொழிலாளர் சங்கம் உட்படச் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி, குறித்த சீன நிறுவனம் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாகத் தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் செயற்பாடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா மற்றும் அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்.






ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
