மாகாண சபை தேர்தல் தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை
தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்குகின்ற மாகாண சபை தேர்தலை நடாத்த அரசாங்க முன்வர வேண்டும் என ஜனநாயகக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை வலியுறுத்தினார்.
சவிஸ்லாந்தில் இடம் பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
யாப்பு சீர்திருத்தம்
ஆனால் உண்மை அதுவல்ல. அங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது. சமஸ்டி தொடர்பான ஒரு கற்பித்தலை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு வேறு எதற்கும் அல்ல.
அங்கு அதிகம் வந்தவர்கள் எம்.பி.பி ஜே.வி.பி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன்கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள்.
ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. எனவே இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.





15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
