வடகிழக்கிலிருந்து தேசிய அணிக்கு வீரர்களை அனுப்பக்கூடிய கழகம் ஒன்றை உருவாக்க அழுத்தங்களை வழங்க வேண்டும் - இரா.சாணக்கியன் (Photos)
ஜனாதிபதி கனவுடன் உள்ள நாமல் ராஜபக்ஷவின் (Namal Rajapaksa) விளையாட்டுத்துறை தொடர்பான வாக்கெடுப்பின்போது வடகிழக்கிலிருந்து தேசிய அணிக்கு வீரர்களை அனுப்பக்கூடிய கழகம் ஒன்றை உருவாக்குமாறு அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiya) தெரிவித்தார்.
தேசிய கபடி போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்ட அணி வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன், மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்க பொதுச்செயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான து.மதன், இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆண்கள் அணி இரண்டாம் இடத்தினையும், பெண்கள் அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையின் 25 மாவட்டங்களிலிருந்தும் 25 கபடி அணிகள் கலந்துகொண்ட இந்த தேசிய கபடி சுற்றுப்போட்டியிலேயே மட்டக்களப்பு கபடி அணி வீர, வீராங்கணைகள் இந்த சாதனையினை படைத்துள்ளனர்.
இந்த நிகழ்வின்போது சாதனை படைத்த வீரர்கள் நினைவுச்சின்னம்
வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.







விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
விவாகரத்து வழக்கில் ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்லும் நபர்கள்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam