கல்வி அமைச்சுக்கு முன் ஏற்பட்ட பதற்ற நிலை! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால் தம்மை ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்று (2) இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது.
பதற்ற நிலை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
