சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனம் மட்டக்களப்பில் போராட்டத்தில் குதிப்பு (Video)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார தொழில் வல்லுநர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று பகல் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தின் போது “பட்டதாரி உத்தியோகத்தர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகளை உடனடியாக வழங்கு, மேலதிக நேரத்திற்கு நியாயமான ஊதியத்தை வழங்கு, தகுதி உள்ளவர்களை தகுதியான இடங்களுக்கு நியமிக்க வேண்டும்” இவ்வாறான பதாதைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுகாதார துறையின் தாதியர்கள், மருந்தக உதவியாளர்கள், மருந்தாளர்கள் இணைந்து சுகவீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்துவரும் அதேநேரம் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக வைத்தியசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
