அதியுயர் வலயங்கள் பிரகடனம்! கொழும்பில் நீதிமன்றத்தின் முன் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் (Video)
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை சட்டத்தரணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கொழும்பின் சில பகுதிகளை அதியுயர் வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் போராட்டக்காரர்கள், இலங்கை அரசாங்கத்தின் அடக்கு முறைக்கும் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கும் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.