ஒன்பதாம் திகதி சுற்றிவளைப்போம்! அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான பிக்குகள் (Video)
பாரிய ஆர்ப்பாட்ட பேரணி
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிக்குகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் வத்தளை பகுதியிலும் பிக்குமார் உள்ளிட்ட பலர் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஒன்பதாம் திகதி சுற்றிவளைப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள பல அமைப்புக்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - டில்சான்