கொழும்பில் வீதிகளை முடக்கும் மக்கள்! நடு வீதியில் ஆர்ப்பாட்டம் (Video)
கொழும்பின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கிராண்ட்பாஸ் பகுதியில் வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், மண்ணெண்ணெய்யும் இல்லை, எரிவாயுவும் இல்லை. நாங்கள் எங்கே செல்வது? கடையில் உணவு வாங்க முடியுமா? என கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதேவேளை பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை சந்தி இன்று காலை பொது மக்களால் முடக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் கோரியே மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.