சுற்றிவளைக்கப்படவுள்ள கொழும்பு! இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பகிரங்க அறிவிப்பு
எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது மற்றும் சுற்றிவளைப்பது உள்ளிட்ட போராட்டங்களில் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ளது.
9ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றிவளைப்பது மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருக்களுக்கு வந்து அமைதியான முறையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்க் கட்சிகள், காலிமுகத்திடல் போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு
இக்கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், எதிர்வரும் 9ம் திகதி நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக பங்கு பெறும்.
இதன்படி மலையக தோட்டங்களில் அன்றைய தினம் பணிகளில் ஈடுபடாமல், அமைதியான முறையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படி மலையக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட வதிவாளர்களை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம்.
கொழும்பு மக்களுக்கும் அழைப்பு
அதேபோல கொழும்பு உட்பட நகரங்களில் வர்த்தக நிலையங்களையும், அலுவலகங்களையும் மூடி, முழுமையாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் படியும், தமது வேலைத்தள பணியாளர்களையும், அரசாங்க எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொள்ள இடமளிக்கும் படியும் அனைத்து தரப்பினரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
