அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் முன்பாக அமைதிவழி போராட்டம் (Photos)
இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இலங்கையில் உள்ள ரோஹிங்கியா அகதிகளினால் இன்று (02.01.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைய காரியாலயத்தின் முன்பாக பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்படும் கொடுப்பனவுகள்
இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைய காரியாலயத்தை மூடுவதால், ரோஹிங்கியா அகதிகள் வேறொரு நாட்டிற்கு நிரந்தரமாக மீள்குடியேற்றம் செய்யப்படுவதோடு, உணவு, வீடுகள் போன்றவற்றுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயற்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த அகதிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam