ஜனாதிபதிக்கு எதிராக பிரித்தானியாவில் ஈழத் தமிழர்கள் போராட்டம் - செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவுக்கு எதிராக நேற்று இரண்டு இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
முதலாவது போராட்டம் ரணில் விக்ரமசிங்க தங்கியிருக்கும் பார்க்லேன் இன்ரர் கொண்டினன்ரல் ஆடம்பர விடுதிக்கு அருகில் நேற்று பிற்பகலில் இடம்பெற்றிருந்தது.
இதன்பின்னர் ரணில் விக்ரமசிங்க பங்கெடுக்கும் சர்வதேச ஜனநாயக ஒன்றிய மாநாடு இடம்பெறும் இடத்துக்கு அருகிலும் மாலை 3.30 மணி முதல் எதிர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தின், போது ”எமது தேசம் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன், ரணிலே வெளியேறு” எனும் கோசங்களை எழுப்பி தமது எதிர்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு......