நாட்டில் நடைமுறையில் உள்ள தடை: வலியுறுத்தும் அமைச்சர்
நாட்டில் உள்ள சிறுவர்களை பணிக்கமர்த்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சாவித்ரி சரோஜா போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் தினைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நோக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், வீதிகளில் யாசகம் பெரும், வர்த்தகம் செய்யும் மற்றும் பிற பாதுகாப்பற்ற வேலைவாய்ப்புத் துறைகளில் ஈடுபடும் சிறுவர்களுக்கு தற்காலிக நன்கொடைகளை வழங்குவதற்குப் பதிலாக, கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகளுக்கான அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதை எங்கள் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
வீதிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துதல், பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் வீட்டு வேலைக்கு அமர்த்துதல் ஆகியவற்றுக்கு எமது அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
