மாவட்ட ரீதியாக தொழில் நிலையங்களை தரிசிப்பு செய்வதற்கான நிகழ்ச்சி திட்டம்
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் 75 பாடசாலை மாணவர்களை தெரிவு செய்து அவர்களை மாவட்ட ரீதியாக தொழில் நிலையங்களை தரிசிப்பு செய்வதற்கான நிகழ்ச்சி திட்டம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்ச்சித்திட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், ஷாஹிரா கல்லூரி, ராஜகீய மகா வித்யாலயம் போன்ற பாடசாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் திருகோணமலை தொழில் நுட்ப கல்லூரி, இறக்ககண்டி ஹோட்டல் பாடசாலை, உயர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் போன்ற இடங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இதன்போது, மாவட்ட இணைப்பாளர் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெசினா பஹ்மி, மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் பிறபானந்தன், விதாதா அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |