அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது குறித்து நாமல் அதிருப்தி
தற்போது இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தீவிர ஆதங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இலாபம் ஈட்டும் அரச நிறுவனம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார் மயமாக்குவது பற்றி சிந்திக்கக் கூடியதாக இருக்கும்.
அதேவேளையில், ஏற்கனவே இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என கூறியுள்ளார்.
இலாபகரமான அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்து கொள்வது அவசியம் என்பதையும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



