வீடு எரியூட்டப்பட்ட பின்னர் எதிர்பார்க்கப்படும் ரணிலின் அரசியல் நிலைப்பாடு!
பிரதமரின் அலுவலகத்தரப்பு இதனை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை, கட்சி தலைவர்களின் கூட்டம், சபாநாயகரால் கூட்டப்பட்டபோது, சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றுக்கு வழியேற்படுத்துவதற்காக தாம் பதவி விலகத் தயார் என்று ரணில் அறிவித்திருந்தார்.
ரணிலின் கருத்து வெளியாகவில்லை
எனினும் தாம் பதவி விலகும்போது, சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று இயக்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்றவை காரணமாக, நிர்வாகம் ஒன்றின் இயக்கம் அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், தமது சொந்த வீடு எரியூட்டப் பின்னர், ரணிலின் கருத்து எதுவும் இதுவரை
வெளியாகவில்லை.