பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்திய தேரர் குறித்து பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்
பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் இலங்கை பிரதமரின் ஆலோசகராக பதவி வகிக்கவில்லை என பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பில் மேலும்,
கெக்கிராவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் பிரதமரின் ஆலோசகராக பதவி வகிப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
நந்தரதன தேரர் தற்போது பிரதமரின் ஆலோசகராகவோ அல்லது வேறு எந்தவொரு பதவியும் வகிக்கவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.