தமிழ் மக்களின் உன்னத பண்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும் தைப்பொங்கல்
ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாசார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாற்று நடுவது முதல் விளைச்சலை அறுவடை செய்வதுவரை விவசாய நடவடிக்கைகளுக்கு சூரிய பகவான் உட்பட இயற்கை ஜீவராசிகள் அனைத்தும் செய்யும் உதவிகளுக்கு நன்றி செலுத்தவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி..
நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்கள். இயற்கையை மீறி எம்மால் எந்த பயணத்தையும் மேற்கொள்ள முடியாது.
இதனால் இயற்கையினூடாக எமக்கு கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு கைமாறு செய்வது மிகவும் உன்னதமான மனிதப் பண்பாகும். நாடு என்ற அடிப்படையில் நாம் விசேட மைல்கற்களை எட்டியுள்ளோம்.

கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியிலான மாற்றம் உட்பட, மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.
அரசாங்கம் மற்றும் அரசு என்ற அடிப்படையில் நாம் அந்த சவால்கள் நிறைந்த மற்றும் பொறுப்புவாய்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து பரிணாம மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.
மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் தினம்
அவ்வாறான தருணங்களில் இயற்கையைப் போற்றி அதற்கு நன்றி செலுத்தும் இத்தகையதொரு அற்புதமான பண்டிகையைக் கொண்டாடுவது, மீண்டுமொரு முறை கலாசார ரீதியிலான செழிப்பான பிரஜைகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும்.

ஒருவரையொருவர் மதித்தல் மற்றும் மற்றவர்களின் மதம், கலாசார உரிமைகளை மதிக்கும் விசேட மனித பண்புகள் மற்றும் நல்லிணக்கத்தில் பூரணமடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்த தைப்பொங்கல் தினத்தில் நாம் மீண்டுமொரு முறை உறுதி கொள்வோம்.
தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் சமூகத்தின் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் தினமாக இன்றைய தினம் அமைய வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri