அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு! இலங்கையில் மக்களுக்கு மிகப்பெரும் அடி
பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 30 முதல் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினையினால் இவ்வாறு விலைகள் உயர்வடைந்துள்ளதாக ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
அத்துடன் இன்றைய தினம் தினம் முதல் பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே கோவிட் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊடரங்கு மற்றும் சில நடைமுறைகள் காரணமாக இலங்கையில் மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான சரிவு நிலை காரணமாக பொருட்களின் விலைகள் அதிலும் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்ந்துள்ளன.
ஏற்கனவே நெருக்கடி நிலையில் இருந்து வந்த நாட்டு மக்களுக்கு இந்த விலை உயர்வு மிகப்பெரும் அடியாக இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
