சஜித், அனுரவிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள சவால்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எவரினாலும் மாற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செய்ய முடியும் என கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதம் செய்யுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகள்
நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த விவாதத்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை நிபந்தனைகளில் திருத்தம் செய்தால் நாடு மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri