எங்களிடம் பலம் உண்டு! அதையும் செய்யத் தயார்: ஜனாதிபதி கோட்டாபய கடுமையான எச்சரிக்கை (VIDEO)
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களது சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
புதிய களனி பாலத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் விசேட சட்டமொன்றை கொண்டு வந்து தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களது சிவில் உரிமைகள் ரத்து செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்றச் செயல்கள் மீளவும் இடம்பெறாதிருக்க வேண்டுமாயின் அவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழு நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இதற்கு பொறுப்பு என கூறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உண்டு எனவும், தேவை ஏற்பட்டால் புதிய சட்டமொன்றை கொண்டு வந்து தொடர்புடையவர்களின் சிவில் உரிமைகளை ரத்து செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் எங்களிடம் கோரிக்கைகளை முன்வைக்கும் போது நிதானமாக முன்வைக்க வேண்டும் எனவும், சிவில் உரிமை பறிக்கப்பட வேண்டுமாயின் அதை செய்யத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri