கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் பிரஜைகள் தேர்தல் விஞ்ஞாபனம்
உள்ளடக்கிய ஆட்சிக்கான குடிமக்களின் குரல் மற்றும் முன்முயற்சி திட்டத்தின் கீழ் கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் முயற்சியால் பிரஜைகள், புத்திஜீவிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பிரஜைகள் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான விளக்கமளிப்பும் கலந்துரையாடலும் இடம் பெற்றன.
மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (07.09. 2024) இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் நலன் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி சுவிட்சலாந்து தூதரகத்தின் உதவியுடன் கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இந்நிகழ்வின் வளவாளர்களாக முகமட் அஷாட் , முகமட் புஹாரி போன்றோர் கலந்து கொண்டனர்.
தயாரிக்கப்பட்ட இந்த பிரஜைகள் தேர்தல் விஞ்ஞாபனத்தினை, தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னிலையில் உள்ள சில தலைவர்களுக்கு அல்லது அக்கட்சிக்கு கையளித்து கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உட்படுத்தும் வகையில் முயற்சித்து அதனை எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கம்.
இவ்வாறான கலந்துரையாடல் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் புத்திஜீகள் போன்றோருடன் இடம் பெற்று வருகின்றது என கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகளால் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இரணைமடு நீர்ப்பாசன செய்கை தொடர்பில் விவசாயிகள் செய்த முறைப்பாடு: விசாரணைக்காக முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |