ஜனாதிபதி பொதுமக்களுக்கு வழங்கிய புதிய வாக்குறுதி!

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Chandramathi Sep 17, 2025 07:15 AM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

இலங்கையில் 2022-2023 காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு உறுதியளித்தார்.

மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இராணுவ முகாமிற்குள் ஏற்பட்ட மோதல் - ஒருவர் கொடூரமாக கொலை

இராணுவ முகாமிற்குள் ஏற்பட்ட மோதல் - ஒருவர் கொடூரமாக கொலை

பொருளாதார நெருக்கடி

தொடர்ந்து உரையாற்றிய அவர், 2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல. அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன.

ஜனாதிபதி பொதுமக்களுக்கு வழங்கிய புதிய வாக்குறுதி! | President S Promise To The Public Today

ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கட்டுமானப் பணிகள் மூலம் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, மாறாக பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.

இலங்கையில் 2022-2023 காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும்.

முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ள இத்தருணத்தில், 2026ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மனித உழைப்பு

"மக்களின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தற்போதைய அரசு அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எந்தவொரு தொழிற்சங்கமும் அரசு மேற்கொள்ளும் திட்டத்தைத் தடுத்தால், அதன் தொடர்பில் முடிவு எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.

ஒரு நிறுவனம் பழமைவாத மரபுகளுடன் முன்னேற முடியாது. அதேபோல், ஒரு நிறுவனம் மனித உழைப்பை மட்டும் கொண்டு முன்னேறாது. ஒரு நிறுவனம் முன்னேற வேண்டுமென்றால், தொழில்நுட்பமும் அறிவியலும் இணைக்கப்பட வேண்டும்.

தொழில்நுட்பம் அல்லது அறிவியலுக்கு பயப்படும் எந்த நிறுவனமும் வளர்ச்சியடையாது. தொழில்நுட்பத்துக்குப் பயப்படும் அல்லது புதிதாக ஏதாவது மேற்கொள்ள அஞ்சும் நாடு முன்னேறாது. எனவே, நிறுவனங்களை இயந்திரமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டும். நிறுவனங்கள் இயந்திரமயமாக்கப்பட்டாலும், நாம் இயந்திரத்தனமானவர்கள் அல்ல.

 நெகிழ்ச்சியான மக்கள்

நாம் நெகிழ்ச்சியான மக்கள். எனவே, நிறுவனங்கள் இயந்திரமயமாக்கப்படும்போது ஊழியர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொண்டு அதற்கு தீர்வுகளை வழங்குவோம். ஓர் அரசு கவிழ்க்கப்படும்போது, ஆளும் கட்சி தொழிற்சங்க உறுப்பினர்கள் புதிதாக தெரிவாகும் அரசின் தொழிற்சங்கத்தில் சேர அழுத்தம் கொடுக்கப்படும் என்பது முன்பிருந்த நிலையாகும்.

இல்லையெனில், மற்ற தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிறுவனத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. எண்ணெய் நிறுவன ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். வரலாற்றில், வாக்குச் சாவடிகளைக் கொள்ளையடிக்கக் கூட அரச ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

கடந்த ஆண்டு, இதுபோன்ற ஓர் அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் மாற்றினோம். எந்த அரச ஊழியரும் இதனால் துன்புறுத்தப்படவில்லை. நம் நாட்டில் உள்ள பொதுமக்கள் முன்பு போலவே அதே அழிவுகரமான முடிவை எதிர்பார்க்கின்றார்களா? மக்கள் இதுபோன்ற விடயங்களை எதிர்பார்த்திருந்தால், அவர்கள் எங்களுக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். அவர்கள் பழைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

அவர்கள் 159 நாடாளுமன்ற இடங்களை வழங்கியிருக்க மாட்டார்கள். ஆனால், சிலர் மாறத் தயாராக இல்லை. மாற்றத்துக்குத் தயாராகுமாறு நாங்கள் அவர்களை அழைக்கின்றோம். இல்லையெனில், நாங்கள் முடிவுகளை எடுக்கத் தயாராக இருக்கின்றோம். ஏனென்றால் நாங்கள் தோண்டித் தோண்டி பார்த்துப் பார்த்து பணியாற்றுவதில்லை.

இந்த முற்போக்கான மாற்றத்தை குறுகிய அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம். பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனைய நிறுவனத்தின் நவீனமயமாக்கலுக்கு ஈரானியத் தலைவர் வந்து அடிக்கல் நாட்டினார்.

ஆனால், உரிய காலத்தில் அந்தப் பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக, மின்சாரக் கட்டணம் கூட மேலதிக சுமையாக மாறியுள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாங்கள் நவீனமயமாக்கி அதன் திறனை அதிகரித்து வருகின்றோம். மேலும், எண்ணெய் ஆய்வுத் திட்டத்தைத் தொடங்க நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொண்டர் அடிப்படையில் முன்வந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடுமையாக்கப்படவுள்ள சட்டம்! வெளியான அறிவிப்பு

நாட்டில் கடுமையாக்கப்படவுள்ள சட்டம்! வெளியான அறிவிப்பு

அநுரவே இறுதி ஜனாதிபதி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

அநுரவே இறுதி ஜனாதிபதி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

மேலதிக தகவல்- ராகேஸ்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US