மாலைதீவிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், மாலைதீவு துணை ஜனாதிபதி பைசல் காசீம் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடாத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம், விவசாயம், மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவிற்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.
நீண்டகால நட்புறவு
இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவின் அடிப்படையில் இந்த கோரிக்கையை விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சவாலான போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தும் கவனம் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.