ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள நடவடிக்கை (Video)
மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் எமது செய்திச்சேவை நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
மகாவலி அதிகார சபையினால், முல்லைத்தீவு கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொக்கிழாய் முதல் நாயாறு வரை இருக்கின்ற 6 கிராம அலுவலர்கள் பிரிவினை மகாவலி அதிகார சபை நிர்வாக அமைச்சின் கீழ் மாற்றுவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், மகாவலி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தமக்கு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்தார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் இன்று வெளியான முக்கிய செய்திகள் அனைத்தையும் தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான விசேட செய்திகளின் தொகுப்பு,

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
