பிரதம நீதியரசருக்கு பதவி நீடிப்பு வழங்க ஜனாதிபதி உத்தேசம்! நீதித்துறை கடும் எதிர்ப்பு
தற்போதைய பிரதம நீதியரசருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீடிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி உத்தேசித்துள்ள நிலையில், அது தொடர்பில் நீதித்துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தற்போதைய பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
ஜனாதிபதி உத்தேசம்
அரசியலமைப்பின்படி, ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், ஒரு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 63 ஆகவும் உள்ளது. ஏனைய நீதிமன்ற நீதிபதிகள் 60 வயதில் ஓய்வுபெறவேண்டும்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவொன்றை முன்வைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.
குறித்த முன்மொழிவு வெளிப்பார்வைக்கு அனைத்து நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான ஒரு முன்மொழிவாக 'நல்ல விதமாக' முன்வைக்கப்படவிருந்தாலும், அதன் அடிப்படை நோக்கம், தற்போதைய பிரதம நீதியரசரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பதவியில் வைத்திருக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் அபிலாசையே என்று தெரிவிக்கப்படுகிறது.
வயது வரம்பு
அத்தகைய வயது நீட்டிப்பு வழங்கப்படாவிட்டால், தற்போதைய பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
தமக்கு விருப்பமான நீதிபதிகளைத் தாம் விரும்பும் வரை பதவியில் வைத்திருக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொள்ளும் முயற்சிகள், சட்ட மற்றும் நீதித்துறைத் துறைகளில் கடும் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளன.

இது நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான ஒரு தவறான முன்னுதாரணம் என்று சட்ட மற்றும் நீதித்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அரசியலமைப்பின்படி, ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், ஒரு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 63 ஆகவும் உள்ளது. இந்த வரம்பை நீட்டிப்பதாயின், அதற்காக ஒரு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும்.
ஆனாலும் அவ்வாறு ஒரு அரசியலமைப்புத் திருத்தம் முன்மொழியப்பட்டாலும் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட நீதித்துறை மற்றும் சட்டவல்லுனர்கள் தரப்பு தீர்மானித்துள்ளது