ஜனாதிபதி தேர்தல் களத்தில் மற்றுமொருவர்
மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான அறிவிப்பை குறித்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் போராட்டக் கூட்டணியைச் சேர்ந்த லஹிரு வீரசேகர,
சட்டத்தரணி நுவான் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே முன்மொழியப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அதேசமயம், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka), விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri