மகிந்தவின் பெறுமதிமிக்க அரசியல் டீல் - தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தனது மகன் நாமலுக்கு ஆதரவளிக்குமாறு மகிந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் நட்புறவோடு முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தேர்தல் செலவு
தேர்தலுக்கு தேவையான செலவுகளை கூட தன்னால் வழங்க முடியும். அத்துடன் கட்சியில் தொடர்ந்தும் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர முதலில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நாமலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, மொட்டு கட்சியுடன் இணைந்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் கோரிக்கையினால் இந்த மாற்றம் ஏற்பட்டதாக, அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri