"அநுர எமக்கு கிடைத்த கிஃப்ட்.." மனையாவெளி கடற்றொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
தற்போது எமக்கு கிடைத்துள்ள ஜனாதிபதி கிஃப்ட் எனவும் மனையாவெளி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை அவர் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் மனையாவெளி படகு சேவையில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊடகங்களுக்கு இன்று (18) கருத்து தெரிவித்த அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், "யுத்தம் காரணமாக 1990களில் இருந்து மனையாவெளியை விட்டு வெளியேறினோம். பின்னர் கரையோர சுற்றுலா பகுதிகளை கொண்ட காணிகளை கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
அரைவாசிக்கு மேல் மக்கள் காணிகளை கையகப்படுத்தியுள்ளனர். இதனை விடுவித்து தருமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இந்த பகுதி கடற்கரை மிகவும் அழகானது. இவ்வாறான கடற்படையினரின் ஆக்கிரமிப்பால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்து சுற்றுலாத் துறை இதனால் பாதிக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறை பாதிப்பு
இங்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கடலுக்குல் டொல்பின் மீன்களை பார்வையிட படகுகளுக்காக அனுமதி வழங்கப்படுகின்ற போதும் அது வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. எமது பகுதி இளைஞர்களுக்கு ஓரிரு அனுமதி பத்திரத்தையே வழங்குகின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.

2004ஆம் ஆண்டுக்கு பின் கலர் மீன்களை பிடித்து சுழியோடுதலில் ஈடுபட்டு வருமானமீட்டினோம். ஆனால் தற்போது அந்த தொழிலும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
இதனை தொடர்ந்து 2017, 2018இல் இருபது இலட்சம் ரூபா வரை படகு சேவைக்காக முதலீடுகளை செய்து வாழ்வாதாரத்தை மேற்கொண்ட நிலையில் தற்போது எங்களுக்கு இல்லாமல் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாத்தறை கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளனர்.
எனவே, எமது பகுதி மக்களுக்கு இந்த சுற்றுலாத் துறையை மேம்படுத்த கடற்படை வசமுள்ள காணிகளை விடுவித்தும் படகு சேவைகளை ஈடுபடுத்த சுற்றுலாப் பகுதிக்கான அனுமதிப்பத்திரங்களையும் வழங்க வேண்டும் இங்கு 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம்.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 103 அனுமதிப்பத்திரங்களை டொல்பின் வோட்ச் பார்வைக்காக வழங்கியுள்ளனர். இதில் இரு அனுமதி பத்திரங்களையே எமது பகுதிக்கு வழங்கியுள்ளனர். எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் அனுமதி பத்திரங்களை வழங்குங்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri