மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத தமிழ் தலைமைகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முல்லைதீவு மாவட்டத்தில் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழர் மரபுரிமைக் கட்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் எமது வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலை மக்களின் எதிர்பார்ப்புகள் அபிலாசைகள் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்குடன் அணுகவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் இம்முறை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஒரு தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு பெரும்பாலான கட்சிகள் முனைப்பை காட்டி வருவதுடன் அதற்கான ஏற்பாடுகளை பெருவாரியாய் முன்னெடுத்து வருகின்றன எனவும் கூறியுள்ளது.
இது தொடர்பில் கட்சி வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,