தாய்லாந்து பிரதமர் பிரயுத் பதவியிலிருந்து இடைநீக்கம்
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளது.
பதவிக்கால வரம்பின் சட்டப்பூர்வ மறு ஆய்வு முடிவு வரை, அவர் உத்தியோகபூர்வ பணியிலிருந்து நீதிமன்றினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக பதவியில் இருந்தமை
தாய்லாந்தின் அரசியலமைப்பு பிரதம மந்திரிகளின் பதவியில் எட்டு ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும்.
பிரயுத் சான்-ஓச்சா 2014 இல் இராணுவப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றி, மேலும் 2019 இல் இராணுவ அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
வெடித்த போராட்டங்கள்
முன்னதாக அவர் பதவி விலகக் கோரி தலைநகர் பாங்காக்கில் உள்ள நாடாளுமன்ற கட்டிடங்களுக்கு வெளியே போராட்டக்காரர்கள் திரண்டு போராட்டங்களையும் மேற்கொண்டுள்ளனர்.
பிரயுத் சான்-ஓச்சாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் தப்பிப்பிழைத்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு எதிராக பல எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், அவர் தனது பதவிக்கால வரம்பை மீறியதாக எதிர்கட்சிகளால் தாக்கல் செய்யப்படடுள்ள மனுவை பரிசீலிக்க காரணம் இருப்பதாக நீதிமன்றம் ஏகமனதாக ஒப்புக்கொண்டுள்ளது.
அதற்கமைய, நீதிபதிகள் குழாமினர், தமது குழாமின் பெரும்பான்மை (4/5) தீர்மானத்துக்கமைய இன்று முதல் பிரயுத்தை அவரது பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
பதவி இழக்க நேரிடும்
பிரதமர் பிரயுத் அரசியலமைப்பில் உள்ள எட்டு ஆண்டு பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பது குறித்த முடிவு எப்போது வெளியிடப்படும் என்று நீதிமன்றம் அறிவிக்கவில்லை.
அவருக்கு எதிராக முடிவுகள் வெளியானால், அவர் உடனடியாக தனது பதவியை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்நாட்டு சட்டத்துக்கமைய, முன்னாள் இராணுவத் தளபதியும், நீண்டகால அரசியல் தலைவருமான, துணைப் பிரதமர் பிரவித் வோங்சுவான் (77), இடைக்கால பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
