பிரசன்ன ரணதுங்கவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்கழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த காரணிகளை ஆராய்ந்ததன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று பிற்பகல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதல் இணைப்பு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (12) காலை அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வாக்குமூலம் அளிக்க வந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் சம்பவத்துடன் இந்தக் கைது தொடர்புடையது என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து வரும் விசாரணை குறித்து முறையான அறிக்கை அளிக்க ரணதுங்க ஆணையத்திற்கு வருகை தந்துள்ளார்.
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam