இலங்கையில் மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கப்படுகிறது! இன்று வெளியான தகவல்
இலங்கையில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய முதலாம் தொகுதி செயலிழப்பு
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோளாறை கண்டறியும் பணியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்ற போதும் மூன்றாவது தொகுதி தொடர்ந்து இயங்கி வருகிறது.
மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மின்வெட்டு நேரம் நீடிப்பு
இதன்காரணமாகவே மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றும், நாளைய தினமும் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கு முன்னர் கடந்த சில நாட்களாக நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
There has been a breakdown in the Unit 1 of Norochcholai Power Plant. Technical staff is working to identify the fault. Unit 2 is undergoing scheduled maintenance work. Unit 3 will continue to operate. West Coast & other Fuel Power Plants will be used to manage the supply.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 15, 2022
அதிகரிக்கப்படும் மின்வெட்டு நேரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு |
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri