இலங்கையில் மக்களுக்கு அதிகாரிகள் மூலம் வரப்போகும் ஜனாதிபதியின் உத்தரவு
நாட்டின் தினசரி எரிசக்தி நுகர்வு உச்சத்தில் இருக்கும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான உச்ச நேரங்களில், எரிசக்தி பயன்பாட்டை முறையாக நிர்வகிப்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, உலகின் அனைத்து நாடுகளுக்கும் தொடர்ச்சியான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதும், எரிசக்தியை முறையாக நிர்வகித்து, அதை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் சவாலைச் சமாளிக்க அதிகபட்சப் பொறுப்பை வழங்குவதும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவரின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அனைவரினதும் பொறுப்பு
எரிசக்தி பாதுகாப்புத் திட்டம் பராமரிக்கப்படுவதையும், எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் உறுதி செய்வது, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவரின் பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23.03.2026) நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாகாண அரசாங்க மட்டத்தில் ஆற்றல் நுகர்வை முறையாக நிர்வகிப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தங்களுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி மாகாண அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்.

மின்சார நுகர்வைச் சேமிக்க முடியும்
விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் விளம்பரப் பலகைகள் மற்றும் பிற அலங்கார மின் அமைப்புகளின் மின் நுகர்வு கணிசமாக அதிகரிக்கிறது என்றும், அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டில் கணிசமான அளவு மின்சார நுகர்வைச் சேமிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டது.
நகரில் அத்தியாவசியமற்ற தெருவிளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்து, ஆற்றலை நிர்வகிப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முன்வைத்த முன்மொழிவு குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
அதற்கேற்ப பின்பற்றக்கூடிய ஒரு மாற்று அணுகுமுறை குறித்து அனைத்துத் தரப்பினரும் கலந்துரையாடி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam